Sunday, March 21, 2010

விகடன் விமர்சனத்தின் லட்சணம் இது தான்

23 ஆகஸ்ட் 2008ல் ஒன்லிரஜினி.காம் வெளியிட்டகட்டுரை


இந்த வார விகடனில் வந்த கூடுதல் இணைப்பில் கண்ட விஷயம் இது. விகடன் வாங்குவதை நான் நிறுத்திவிட்டபடியால் நண்பரிடம் இரவல் வாங்கி இப்பதிவிற்க்காக பயன்படுத்தினேன்.
இதை படிப்பவர்கள் நிச்சயம் இத்தனை நாள் இவனுங்க விமர்சனத்தையா விழுந்து விழுந்து படிச்சிட்டு இருந்தோம்முன்னு உங்களையே நொந்துக்கபோறீங்க…

கீழ்கண்ட அன்னக்கிளி விமர்சனம் 30.05.1976 ஆனந்த விகடனில் வெளியானது.
விமர்சனத்தை முழுதுமாக படியுங்கள். அதிர்ச்சியடைவீர்கள்.

தமிழ் திரை வரலாற்றில் ஒரு புது அத்தியாயத்தையே துவக்கிய இசைஞானி இளையராஜா அறிமுகமான படம் இது. ஹிந்தி திரை இசை ஆதிக்கத்திலிருந்த தமிழ் ரசிகர்களுக்கு கேட்க கேட்க தெவிட்டாத பாடல்களை தமிழில் தந்து தமிழ் மக்களின் ரசனையையே மாற்றிய அவதார புருஷர் இளையராஜா. அவர் அறிமுகமானது இந்த படத்தில் தான். அவரது மச்சானை பார்த்தீங்கள பாடல் இன்றளவும் நமது செவிக்குள் ஒலித்துகொண்டிருக்கிறது. ஆனால் அவரை பற்றியோ அல்லது அன்னக்கிளி வெற்றி பெற மாபெரும் காரணமாக இருந்த அவரது இசை பற்றியோ ஒரு வார்த்தை கூட இந்த விமர்சனத்தில் இல்லை. இதுதான் இவர்கள் விமர்சனம் எழுதும் லட்சணம்.
அட வேறு ஏதாவது ஒரு விஷயத்தை இப்படி புறக்கணித்தனர் என்றால் கூட விட்டுவிடலாம். ஆனால் ஒரு படத்திற்கும் அதன் வெற்றிக்கும் இசை என்பது எவ்வளவு முக்கியம்? ஒரு பத்திரிகை அதை புறக்கணிக்கிறது என்றால் அதன் தகுதி என்ன?
இத்தனை காலம் இவர்கள் எழுதியதையா நாம் படிச்சி ஒரு படத்தை பற்றி முடிவு பண்ணினோம்? என்ன கொடுமை இது?
பெயர் போட வேண்டாம். அட அட்லீஸ்ட் “ஒருவர் இசை அறிமுகமாகியிருக்கிறார் இந்த படத்தில். அவர் பாடல்கள் அருமை” என்றாவது எழுதியிருக்கலாம் அல்லவா?

புதியவர்களையும் திறமைசாலிகளையும் ஊக்குவிப்பதாக பீற்றிகொள்ளும் விகடனின் லட்சணம் பன்னெடுங்காலமாக இதுதான். இவர்கள் புறக்கணிப்புகளையும் இருட்டடிப்புகளையும் தாண்டி தான் இளையராஜா வெற்றி கொடி நாட்டினார். பிற்காலத்தில் அவர் பல வெற்றிபடங்களை கொடுத்த பின்பு தான் விகடன் அவரை கண்டுகொண்டது. கிட்ட தட்ட குமுதமும் இதே போல தான். மேற்படி இருபத்திரிக்கைகளும் செய்த செய்யும் அடாவடி கொஞ்சம் நஞ்சமில்லை.
விகடன் மற்றும் இன்ன பிற பத்திரிக்கைகள் ஏதோ இளையராஜாவை மட்டும் இப்படி புறக்கணித்ததாக நினைக்கவேண்டாம். ரஜினியை கூட இப்படித்தான் நடத்தினார்கள். இவர்களின் அத்தனை கொடுமை மற்றும் அவதூறுகளையும் மீறித்தான் சூப்பர் ஸ்டார் அந்த நாற்காலியில் உட்கார்ந்தார். இன்றும் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். “இப்படியே ரஜினி நடித்து கொண்டிருந்தால் சூப்பர் தனியாக ஸ்டார் தனியாக போய்விடும்!!” என்றெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே விமர்சனம் எழுதியவர்கள் தானே இவர்கள்.
மேலும் விகடன் என்றால் ஏதோ தரமான பத்திரிகை என்பது போல அனைத்து தரப்பு மக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. அது ஒரு கட்டுக்கதை என்று இப்போது புரிந்ததா?
எதற்கு இந்த பதிவு என்றால் - பத்திரிக்கைகளின் எதிர்ப்பால் புறக்கணிப்பால் ஒருவரது முன்னேற்றத்தை தடுத்து விடமுடியாது என்பதை உணர்த்தவே!!
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல; இளையராஜாவின் ரசிகர்கள் கூட இவர்களை புறக்கணிக்க வேண்டும். அது தான் இவர்களுக்கு சரியான தண்டனை.
இப்போது விகடனுக்கு நாம் வழங்கும் மதிப்பெண் 0/100.
எப்படி இவர்களை வழிக்கு கொண்டு வருவது?
நமது புறக்கணிப்பால் குறைந்தபட்சம் ஒவ்வொரு இதழுக்கும் 1000 பிரதிகளாவது அவர்களது விற்பனை குறைய வேண்டும். 1000 பிரதிகளின் முக்கியத்துவம் என்ன என்பது விகடன் குமுதம் இருவருக்கும் நன்கு தெரியும். அப்போது தானாகவே ரஜினி பற்றிய தவறான செய்திகள் மற்றும் அவதூறுகள் நின்றுவிடும். இதை ஒரு சபதமாக ஏற்போம். அப்படி ஒரு நிலையை நாம் ஏற்படுத்திவிட்டால் அதுவே நமக்கு பெரும் வெற்றி தான். சூப்பர் ஸ்டாருக்கு நாம் செய்யும் பெரும் உதவியும் அதுவே. (ஆன் லைன் வாசகர்களாக இருக்கும் நமது ரசிகர்கள் தங்களது விகடன்.காம் சந்தாவை உடனடியாக ரத்து செய்து அதற்கான காரணத்தையும் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துவிடுங்கள்!!)
நன்றி :onlysuperstar.com

No comments:

Post a Comment