Sunday, March 21, 2010
விகடன் விமர்சனத்தின் லட்சணம் இது தான்-2
இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை
புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண் டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!
துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம் - இது கதாநாயகன் ரவி (மோகன்).
ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவ னைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்).
- இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.
'முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ' பாடலும், டி.வி-க்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்.பி.பி- யும் இவருக்கு அசைக்க முடி யாத இரு தூண்கள்!)
தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறி முகமாறது - பின்பகுதி விவ காரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!
படத்துலே என்னதான் குறை?
ஹீரோவோட பிளட் கான் சர், 'வாழ்வே மாய'த்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் 'அந்த 7 நாட்கள்' பாதிப்பு!
இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!
-பயணங்கள் முடிவதில்லை படத்தின் "ஆனந்த விகடன்" விமர்சனம் தான் நீங்கள் மேலே பார்த்தது. ஹும்.. என்னத்த சொல்றது....?
முடிஞ்சா அப்படியே "கலைஞனை மதிக்காத சமூகமே" படியுங்கள்,
முன்னாடியே படிச்சிருந்தா அதை ஞாபக படுத்திக்கொள்ளுங்கள். விகடனின் இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை போல.
நன்றி apsaravanan.blogspot
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment