நான் கல்லூரி செல்லும் வரை பாடல் கேட்கும் பழக்கமே இல்லை. அப்படியே கேட்டாலும் அது அப்போதைய ஹிட் பாடலாகவே இருக்கும்( ஓ.. போடு.. மன்மதராசா வகையறாக்கள் ). சன் மியூசிக் சேனல் ஆரம்பித்த போது பாட்டுக்கெல்லாம் ஒரு சானலா என்று திட்டி இருக்கிறேன்.கல்லூரிக்கு சென்ற பின் எல்லோருடனும் சேர்ந்து பாடல் கேட்க ஆரம்பித்தேன் .பழைய பாடல்கள் பிடிக்காது (கண்ணே கலை மானே போன்ற விதி விலக்குகளை தவிர).குறிப்பாக ரஹ்மான் பெரிதாக கவர்ந்தார் கொஞ்ச காலத்தில் என்னை முழுவதுமாக ஆட்சி செய்ய தொடங்கினார் என்றே கூறலாம் . பின் ஒரு இனிமை இல்லாத நாளில் தூக்கம் வராமல் நிலவை துணைக்கு அழைத்து கொண்டிருந்தேன் என் வெறுமையை போக்க.. அப்போது என் நண்பன் அவன் செல்லில் sleeping songs அப்டிங்கற foldar-ல் இருக்கும் பாடல்களை கேட்டால் தூக்கம் வரும் என்று சொல்லி கொடுத்தான் முதல் படலை கேட்டதும் தூங்கி விட்டேன்.அப்போது தான் இளையராஜாவின் ஆளுமை புரிய தொடங்கியது.அதன் பிறகு தூக்கம் வராத இரவுகள் எத்தனையோ அதில் எல்லாம் தூங்க வைத்தவர் இளையராஜா . அதில் முதன் மையானது அன்று கெட்ட அந்த முதல் பாடல்.அந்த பாடல் "ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு". இளையராஜா சார் U ARE GREAT!!! அந்த பாடல் உங்களுக்காக இந்த படலை கூட வெறுப்பவர்கள் இருப்பார்கள என்ன......
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம்..)
குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
(ஊரு சனம்..)
மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மால தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்
(ஊரு சனம்)
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
நன்றி: peenamoodi.blogspot.com
good!!
ReplyDeleteTamilnadu Results
Tamilnadu Results and All State Results
நல்ல புதிய நல்லது
ReplyDeleteநான் என் திருமதி மிராபெ டேனியல்ஸ் ஒரு நம்பகமான மற்றும் முறையான கடன் கடன் உள்ளது.
2% வட்டி விகிதத்துடன் உண்மையான மற்றும் சுலபமான நிபந்தனைகளை நாங்கள் வழங்குகிறோம். இருந்து
$ 1,000 - $ 100,000. யூரோ மற்றும் பவுண்ட். தொழில்முயற்சியாளர்களுக்கும் நான் கடன்களை வழங்குகிறேன்:
தனிப்பட்ட கடன்,
மாணவர் கடன்கள்,
போக்குவரத்து கடன்
வணிக கடன்கள்.
நிறுவனத்தின் கடன்கள்
மேலும் தகவலுக்கு நேரடியாக என்னை தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: mirabeldanielloanfirm@gmail.com